Sunday 5th of May 2024 01:27:43 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவின் கனவு கலைந்தது; ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள்!

இந்தியாவின் கனவு கலைந்தது; ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள்!


ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை ரி-20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய சூப்பர்-4 போட்டியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோதின.

இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியுற்றிருந்தால் ஆப்கானுடனான போட்டியில் வெற்றி பெற்று ரன் ரேட் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் சந்தர்ப்பம் இந்திய அணிக்கு இருந்தது.

பாகிஸ்தானின் வெற்றி இந்திய அணியின் இறுதிப் போட்டி கனவை கலைத்துள்ளது.

இன்றைய சூப்பர்-4 சுற்று ஆட்டமொன்றில் இந்தியா - ஆப்கான் அணிகள் மோதுகின்றன.

அதேபோல் நாளைய தினம் சூப்பர்-4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன.

வரும் 11ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்வுள்ள 2022 ஆசிய கிண்ண ரி-20 தொடரின் சாம்பியன் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE